மதுரையில் முன்னாள் திமுக மண்டலத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சப்பட்டது. அத்துடன், 10க்கும் மேற்பட்ட வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த வி.கே.குருசாமி என்பவர் திமுக மண்டல தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் தற்போது கொலை வழக்கு மற்றும் ஆயுதங்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வி.கே.குருசாமியின் சகோதரியின் கணவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வி.கே.குருசாமியும் சிறையில் இருந்து வெளியே வந்திருப்பார் என நினைத்து, அவரது எதிரிகள் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அத்துடன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் அவர்கள் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் திமுக மண்டலத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!!
-
By Web Team

Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023