பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக உயர்ந்து விற்பனை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக உயர்ந்து விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி சென்னையில் 2-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 70 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து, 86 ரூபாய் 9 காசுகளுக்கும் விற்பனையாகிறது. 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது.

Exit mobile version