வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் கணவரை மீட்டுத் தர ஆட்சியரிடம் மனு

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் கணவரை மீட்டுத்தரக் கோரி, மகேஸ்வரி என்பவர், மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்களுடன் மனு அளித்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் காலனி பகுதியில் மகேஸ்வரி என்பவரின் கணவர் தங்கமணி, கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு ஓட்டுநர் பணிக்காக சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சரி வர சம்பளம் கொடுக்கவில்லை என்றும், சம்பளம் கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும் கணவர் தங்கமணி தொலைபேசி வாயிலாக மகேஸ்வரியிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சவுதி அரேபியாவில் தவிக்கும் தனது கணவரை மீட்டுதருமாறு, உறவினர்கள் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் வந்திருந்த மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Exit mobile version