கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படாமல் தடுக்க கோரி மனு!!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படாத வகையில், உரிய வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி, “மக்கள் பணியில் மக்கள்“ என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அடங்கிய அமர்வு, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி, குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Exit mobile version