கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

நிர்பயா வழக்கில் கடந்த 7-ஆம் தேதி டெல்லி அமர்வு நீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. பின்பு, வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து முகேஷ் சிங் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்கு கருணை மனுவை அனுப்பி வைத்தார். இந்நிலையில் முகேஷ் சிங் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது நிராகரித்து உள்ளார்.

Exit mobile version