உலகளந்த பெருமாள் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உலகளந்த பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மேற்சவ விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட திருத் தேரில் உற்சவர் உலகளந்த பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். 4 மாட வீதிகளில் வலம் வந்த தேரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுந்தனர்.

Exit mobile version