ஒகேனக்கல்லில் பரிசல்களை நிபந்தனைகளுடன் இயக்க அனுமதி

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 10,000 கன அடியிலிருந்து 18,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், 11 நாட்களாக 117 அடியாக நீடித்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.70 அடியாக குறைந்தது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து, வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி உபரிநீர், வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் வரத்து, வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் 27வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நிபந்தனைகளுடன் பரிசல்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பரிசல்கள் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்தநிலையில், இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.70 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரத்து 302 கன அடியில் இருந்து, 10 ஆயிரத்து 189 கனஅடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 800 கன அடியாகவும் உள்ளது.

Exit mobile version