திரையரங்குகளை திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் திங்கள் கிழமை முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கை திறக்க அனுமதி வழங்கப்பட்டள்ளது.

தமிழ்நாட்டில் 2ம் அலை கொரோனா தொற்று காரணமாக, நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது, தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், வரும் 23ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை திரையரங்க உரிமையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version