திருப்பதியில் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி

திருப்பதி திருமலையில் இன்று முதல், அனைத்து மாநில பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இலவச தரிசன டிக்கெட்டை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. கடந்த ஒரு வார காலமாக சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில், இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், தங்களுக்கும் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், அனைத்து மாநில பக்தர்களுக்கும், இன்று முதல் இலவச சுவாமி தரிசனம் செய்ய டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை, 2 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரமும் அதிகரிக்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Exit mobile version