அடுக்கடுக்காக விருதுகளை தட்டிச் செல்லும் பரியேறும் பெருமாள்

புதுச்சேரி அரசு ”பரியேறு பெருமாள்” படத்திற்கு விருது வழங்க உள்ளது

மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ரஞ்சித் தயாரிப்பிலும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ”பரியேறும் பெருமாள்”. இப்படம் மண் வாசம் தழுவிய ஒரு கிராமத்து கதையாகும்.இப்படத்தில் நடிகர் கதிர் ,நடிகை ஆனந்தி மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தின் கருவானது நடைமுறையில் இருக்கும் சாதி வெறிக் கொடுமையை இரண்டு அடுக்குகளாக வெளிப்படுத்தி மி க எளிதில் மக்களிடம் சென்றடையச் செய்தனர். இந்நிலையில் தேசிய விருதுகள் மற்றும் பல விருதுகளை பெற்றது. தற்போது புதுச்சேரி அரசு பரியேறு பெருமாள் படத்திற்கு சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் என்ற விருதை வழங்க உள்ளது.இந்த விருதை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வழங்க உள்ளார்.

நாளை மாலை 6 மணிக்கு புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி முருகா திரையரங்கில் தொடங்கும் இவ்விழா வருகிற 7 ஆம் தேதி வரை நடைப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version