தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மரியாதை

தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருப் படத்திற்கு, அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, தந்தை பெரியாரின் சிலைக்கு கீழ், அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

தந்தை பெரியாரின் எண்ணங்கள் அஇஅதிமுகவின் கொள்கைகளாக ஒலித்துகொண்டிருப்பதாக தெரிவித்தார்.

திமுகவின் பொய் வாக்குறுதியால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் மன அழுத்தத்துக்கு உட்பட்டு தற்கொலை செய்து கொள்வதாக அவர் வேதனை தெரிவித்தார்.

 

Exit mobile version