2019 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது அறிவிப்பு

 

2019ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதுக்கு செஞ்சி ந.ராமச்சந்திரனும், அம்பேத்கர் விருதுக்கு முனைவர் கா.அருச்சுனனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 1995 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்த ஆண்டிற்கான பெரியார் விருதிற்கு செஞ்சி ந.இராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version