பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கொடுத்த கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.

வரி ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களை தடுக்க பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனையடுத்து செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ஆதான் எண்ணை இணைக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து 5 முறை நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், பான் கார்டு செல்லாது என்றும், வருமான வரி தாக்கல் செய்வதில் சிக்கல் எழும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Exit mobile version