7 பேர் விடுதலைக்கு அரசு தீர்வு காண ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க அற்புதம்மாள் கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆளுநருக்கு அழுத்தம் தந்து தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.

திருவாரூரில் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசிய போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் அவர்களது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் ஆளுநர் ஏன் விடுதலை செய்யவில்லை என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version