ரேஷன் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்தால் மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள்- ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

ரேஷன் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்தால், மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக கூறினார். புயல் நிவரணமாக மத்திய அரசு அளித்துள்ள தொகை, யானைப் பசிக்கு சோளப்பொறி போல உள்ளதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசு கடைபிடித்து வரும் தவறான பொருளாதார கொள்கையால், நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ரேஷன் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்தால், மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.

Exit mobile version