தயாநிதிக்கு மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்…

தயாநிதி மாறன் ஒரு குற்றவாளி என்று நீதிமன்றமே தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்று மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பால் தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணி பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைதளங்களில் நடத்தப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் தனக்கு 70 சதவிகித வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தயாநிதி மாறனுக்கு தொகுதியின் பிரச்சினைகள் எதுவும் தெரியவில்லை என்று சாம் பால் கூறினார். தயாநிதி மாறன் ஒரு குற்றவாளி என்று தான் கூறவில்லை என்றும் நீதிமன்றமே கூறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

Exit mobile version