பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் தங்களது பயணம் மகிழ்ச்சியாக உள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஒரு வாரம் விடுமுறை வருவதால், பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை கோயம்பேட்டிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதால், தங்களது பயணம் சிரமமின்றி, மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளதாக சென்னை கோயம்பேட்டில் இருந்து தங்களது ஊர்களுக்கு பயணிக்கும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version