கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவர்கள் சுகாதாரத்துறையை அணுகலாம் – விஜயபாஸ்கர் அறிவிப்பு!

 சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில், உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான சர்வதேச கருத்தரங்கம்  நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, சர்வதேச மருத்துவ துறை வல்லுனர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர், அதை சுகாதாரத்துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபிக்கும் பட்சத்தில், அம்மருந்துக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்று கூறினார். மேலும்,கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பல நாடுகளை பாதித்துள்ளதால், மற்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து சர்வதேச மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டதாக பல்கலைகழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

Exit mobile version