திமுக வேட்பாளர் சரியான நேரத்திற்கு வராததால் கலைந்து சென்ற பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற திமுக செயல் வீரர்களின் கூட்டத்திற்கு ஆட்கள் யாரும் வராததால் நாற்காலிகள் காலியாக கிடந்தன.

கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரியில் திமுக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக காட்டாங்குளத்தூர் பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் வேட்பாளர் காலதாமதமாக வந்ததால் பொறுமையிழந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், நாற்காலிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனைக் கண்டு கோபமடைந்த திமுக தலைவர்கள் சக நிர்வாகிகளைக் கடிந்து கொண்டனர்.

Exit mobile version