முதலமைச்சர் பழனிசாமியின் பெருந்தன்மையை பாராட்டிய மக்கள்

தனது தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்த மாற்றுத் திறனாளி மாணவருடன், முதலமைச்சர் பழனிசாமி உற்சாகமாக போஸ் கொடுத்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சென்னையில் நடந்த தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக நிறுவன தினவிழா, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, இசை – ஓவிய கண்காட்சியில் பங்கு பெற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளி மாணவர் ஷ்ரேயாஸ்வி பாலா சான்றிதழ் பெற மேடைக்கு வந்தார். முதலமைச்சர் அருகில் சென்ற அவர், தோளில் மீது கைபோட்டு சிரித்தபடி, புகைப்படம் எடுக்க முயன்றார். உடனே அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், மாற்றுத் திறனாளியின் கையை எடுத்துவிட முயன்றனர். ஆனால் முதலமைச்சர் பழனிசாமி, அவரது ஆசைப்படியே போட்டோ எடுக்கட்டும் என்று அந்த மாணவரை உற்சாகப்படுத்தினார். அங்கு கூடியிருந்தவர்கள் முதலமைச்சரின் பெருந்தன்மை மிக்க குணத்தை மனதாரப் பாராட்டினர்

Exit mobile version