கொரோனா பாதிப்பில் தற்காத்துக் கொள்ள சித்தா மருந்துகளை நாடும் மக்கள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சித்தா மருந்துகளை நாடி வருகின்றனர்.

கொரொனா பாதிப்பால் தமிழ்நாடு திக்கு முக்காடி வருகிறது. தினசரி பாதிப்புகளும் , உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, சித்த மருந்துகளின் பக்கம் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் சித்தா மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள சித்தா மருந்து கடைகளில் திரிபலா சூரணம் , அமுக்காரா மாத்திரைகள் உள்ளிட்ட மாத்திரைகளை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சித்தா மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், வைரஸ் தாக்குவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் சித்தா மருந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version