சிலி நாட்டில் ஆளும் கட்சியினருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில், பல்பொருள் அங்காடிக்கு வன்முறையாளர்கள் தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 

ஊழல் மற்றும் பொருளாதார சீர்கேட்டுக்கு காரணமான ஆளும் கட்சியினருக்கு எதிராக சாண்டியாகோ, உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் போராடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் நடத்தும் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், கார்கள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆங்காங்கே வன்முறை கும்பல்கள் பொதுச் சொத்துகளை சூறையாடின.தொடர்ந்து 4 வது நாளாக நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டத்தால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெய்ரூட் உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் காரணமாக கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. இவர்களை அடக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version