மாமல்லபுரத்தில் வண்ண விளக்கு ஒளியில் புராதனச் சின்னங்களைக் காண மக்கள் ஆர்வம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் எல்.இ.டி விளக்குகளின் வெளிச்சத்தில் புராதனச் சின்னங்களைக் காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதனை முன்னிட்டு 4 நாட்களுக்கு முன்பிருந்தே அங்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. தலைவர்கள் பார்வையிடுவதற்காக மாமல்லபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், தோரணங்ககள் கட்டப்பட்டுப் புதுப் பொலிவுடன் காணப்பட்டது.

இந்நிலையில் தலைவர்கள் வந்து சென்ற பின் மாமல்லபுரத்துக்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டதால், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் குவிந்து வருகின்றனர். எல்.இ.டி. விளக்கொளியில் பாரம்பரியச் சின்னங்களின் அழகைக் கண்டுகளித்து வருகின்றனர்.

Exit mobile version