மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க 2 லட்சம் சீனர்கள் விண்ணப்பம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இதுவரை 2 லட்சம் சீனர்கள் விசா கோரி விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பிறகு சீனர்களின் பார்வை தமிழகம் மீது திரும்பியுள்ளது. மாமல்லபுரம் வருவதற்கு சீன சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும், தற்போது வரை 2 லட்சம் சீனர்கள் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன அதிபர் வருகைக்குப் பிறகு மாமல்லபுரத்துக்கு சுற்றுலாவில் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

 

Exit mobile version