மாமல்லபுரத்தில் செல்போன் டவர்கள் அகற்றப்படும்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்திற்கு வருகை தர இருப்பதால், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இரண்டு செல்போன் டவர்களை அகற்று பணி நடைபெற்று வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர், பேச்சு வார்த்தை நடத்த அடுத்த வாரம் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு வருகை தர உள்ளனர். இதனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெண்ணெய் உருண்டை பாறை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இரண்டு செல்போன் டவர்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு கடிதம் வழங்கியது. அதன்படி, இரண்டு செல்போன் டவர்களை அகற்றும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் செல்போன் டவர்கள் அகற்றப்படும் என நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கோபுரங்களில் உள்ள இணைப்புகளுக்கான சிக்னல்கள் அருகில் உள்ள டவர்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

Exit mobile version