தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிப்பு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடையை ஆற்றி வருகின்றனர்.

தொகுதியில் உள்ள ஆறு சட்டபேரவை தொகுதிகளில் உள்ள 14 லட்சத்து 25 ஆயிரத்து 401 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 1595 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 236 வாக்குசாவடிகள் பதற்றமானதாகவும், மூன்று வாக்குசாவடிகள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டு அங்கு மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் தமிழக சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version