கேள்வி கேட்ட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக சார்பில் அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொதுகூட்டத்தில் கேள்வி கேட்ட பொதுமக்களுடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா கண்ணப்பன் பேசி கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட ஒருவர் எதிர் கேள்வி கேட்டதாக தெரிகிறது. உடனே மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version