நேரு குடும்பத்தினர் மீதான பாஜகவின் விமர்சனங்களை மக்கள் புறக்கணித்து விட்டனர் : சரத் பவார்

நேரு குடும்பத்தினர் மீதான பாஜகவின் விமர்சனங்களை மக்கள் புறக்கணித்து விட்டனர் என சரத் பவார் தெரிவித்துள்ளார். தனது 78-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு ஜவஹர்லால் நேரு, இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரை சரியாகத் தெரியாது என கூறினார்.

அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் தாக்கம் குறித்து மட்டும் தான் தெரியும் என குறிப்பிட்ட அவர், நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, முன்னாள் பிரதமர் நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, பாஜகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்ததை இளைஞர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version