சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

சென்னை சூளைமேடு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூளைமேடு காமராஜர் நகர், வீரபாண்டி நகர், கில் கில் நகர், என்ஜிஓ காலனி, கந்தப்பன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பகல், இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு பிரச்னை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆன்லைனில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளும், இல்லத்தரசிகளும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும், இரவு நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மின்வெட்டு தொடர்பாக மின்சாரதுறை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டாலும் சரிவர பதில் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Exit mobile version