மீன் வாங்க அதிகாலை முதலே குவிந்த அசைவ பிரியர்கள்

சென்னை பட்டினப்பாக்கத்தில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் முண்டியடித்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இறைச்சி, மீன் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீன் சந்தைகளில் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில்லரை விற்பனையும் ஜோராக நடைபெறுகிறது. பட்டினப்பாக்கத்தில் அதிகாலை முதல் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். பெரும்பாலான கடைகளில் பாதுகாப்பான இடைவெளி இல்லாமல் அசைவ பிரியர்கள் முண்டியடித்தனர். காவல்துறையினரும் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

Exit mobile version