பாதிக்கப்படும் இடங்களை ஆய்வு செய்ய 11 குழுக்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வைகை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளாதாக கூறினார்.

வைகை அணையில் உபரி நீர் திறக்கப்பட்டாலும், மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றார் அவர். கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதை குறிப்பிட்ட அமைச்சர், பாதிக்கப்படும் இடங்களை ஆய்வு செய்ய 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version