கடம்பூர் வனப்பகுதியை ஒட்டிய அகழியை அகலப்படுத்த மக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அகழியை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாதேவப்பா. தனது தம்பியின் நிலத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள அவர், இரவு நேரங்களில் பயிரை காவல் காத்து வந்தார்.

இந்நிலையில், தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்திக் கொண்டிருந்த ஒற்றை யானையை அவர் விரட்ட முயன்றார். அப்போது, யானை மிதித்ததில் படுகாயமடைந்த மாதேவப்பா, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலத்தில் புகுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறும் கடம்பூர் மலைப்பகுதி விவசாயிகள், வனப்பகுதியை ஒட்டி வெட்டப்பட்டுள்ள அகழியை அகலப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version