குளச்சலில் ஆய்வு செய்ய வந்த திமுக அமைச்சர்களுக்கு மக்கள் கண்டனம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் ஆய்வுசெய்த திமுக அமைச்சர்களுக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
குளச்சலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற வருவாய்த்துறை அமைச்சரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல், பெயரளவில் ஆய்வுசெய்து திரும்ப முயற்சித்தனர். முகாம்களில் தங்கயிருந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, வேறு வழியின்றி அவர்களை சந்தித்தனர்.

மழை தொடங்கியது முதல் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சர்களிடம் மக்கள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். அப்போது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தவர்களிடம் அமைச்சர் அநாகரிமாக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version