மதுரையில்தேரோட்டத்தை தொடர்ந்து மக்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் நிறைவு பெற்ற நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 2 மணி நேரம் வாக்குப்பகுதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 8 மணி வரை அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேரோட்டம் முடிந்த பின்னர் ஏராளமான மக்கள் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்று ஆர்வமுடம் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயகக் கடமையை அவர்கள் ஆற்றி வருகின்றனர்.

Exit mobile version