வெப்பம் வாட்டிய நிலையில் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மேல், வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை திருத்தணியில் அதிகப்படியாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலவி வந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் திடீரென இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே, தற்போது வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவி வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version