திருவண்ணாமலையில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகளை வாங்க மக்கள் ஆர்வம்

திருவண்ணாமலையில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகளை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் இயற்கை முறையில் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த காய்கறிகள் அனைத்தும் புதுப்பாளையத்தில் உள்ள பாரம்பரிய வார சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

வாரந்தோறும் வியாழன் கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தையில் அனைத்து வகையான காய்கறிகள், பழ வகைகள், விவசாய உபகரணங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் கூட்டம் அலைமோதும். இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள் கிடைப்பதால், ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Exit mobile version