கூடலூர் குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை வருவதால் மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஒலிமடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வருவதால் அச்சமடைந்த பொதுமக்கள், இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக ஒலிமடா உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

Exit mobile version