ப்ரோ கபடி லீக் தொடரின் 3வது வெற்றியை பதிவு செய்தது பாட்னா பைரட்ஸ்

ப்ரோ கபடி லீக் தொடரின் 33 லீக் போட்டியில் யுபி யோதா அணியை வீழ்த்திய பாட்னா பைரட்ஸ் அணி 3வது வெற்றியை பதிவு செய்தது.

ப்ரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கில் நடந்த 33வது லீக் போட்டியில் யுபி யோதா அணியும் பாட்னா பைரட்ஸ் அணியும் மோதின.

ஆட்டம் தொடங்கிய 15வது வினாடியில் பாட்னா வீரர் நீரஜ் குமார் முதல் புள்ளியை தனது அணி பெற்று தந்தார். ஒன்று இரண்டு புள்ளிகள் வீதம் எடுக்க யுபி யோதா தடுமாறிய நிலையில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி தொடர்ச்சியாக புள்ளிகளை குவித்தது. முதல் பாதி முடிவில், 24 க்கு 9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இதன் பிறகு தொடங்கிய 2ம் பாதியிலும், பாட்னா வீரர்கள் வரிசையாக புள்ளிகளை குவித்து வியக்க வைத்தனர். குறிப்பாக யுபி யோதா அணியை 6 முறை ஆல் அவுட் செய்த பாட்னா பைரட்ஸ் அணி வெற்றியை எளிதாக்கியது. இரண்டாம் பாதி முடிவிலும், பாட்னா பைரட்ஸ் 41க்கு 20 என்ற புள்ளிக் கணக்கில் யுபி யோதா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Exit mobile version