மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் வசதிக்காக பேட்டரிகார் வசதி

நோயாளிகளின் வசதிக்காக தமிழகத்தில் முதல்முறையாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவ கல்லூரி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், இவ்வாறு நடந்து செல்பவர்கள் மயங்கி விழும் நிலை காணப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியவந்த நிலையில், நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்கவரும் பார்வையாளர்களின் வசதிக்காக இலவச பேட்டரி கார் வசதி தற்போது ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

Exit mobile version