ஆம்னி பேருந்துகளில் பயணிகளுக்கு போர்வை வழங்கப்படாது!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக படுக்கை வசதிகளுடன் கூடிய ஆம்னி பேருந்துகளில் போர்வை உள்ளிட்டவை வழங்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் நியூஸ் ஜெ செய்தியாளரிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசும் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார். இன்று முதல் வரை படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன ஆம்னி பேருந்துகளில் சைடு ஸ்கிரீன், பெட் கவர், போர்வையை முற்றிலுமாக அகற்றி இயக்க இருப்பதாக அவர் கூறினார். மேலும் ஆம்னி பேருந்துகள் அனைத்திலும், தினசரி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து இயக்குவதாகவும் அவர் தெரிவித்தார். பேருந்து பயணத்தின் போது, பயணிகளுக்கு போர்வை வழங்கப்படாது என்றும், பயணிகள் தாங்களே போர்வை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வரவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பயணிகள் ஒத்துழைக்குமாறும் அன்பழகன் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version