கடலில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்!

விபத்தில் சிக்கிய இந்தோனேசியா விமானத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 185 பேர் பயணித்தது தெரிய வந்துள்ளது. விமானம் கடலில் விழுந்ததால், அவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பங்கால் பினாங்கிற்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஜே.டி 610 பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான விமானத்தில் 178 பயணிகள், 2 விமானிகள், 5 பணியாளர்கள் பயணித்ததாக இந்தோனேசிய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. விமானத்தில் பயணித்த 185 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Exit mobile version