பள்ளி மாணவர்கள் கைகளில் கட்சி பதாதைகள் : அமமுக-விற்கு பொதுமக்கள் கண்டனம்

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவர்கள் கைகளில் கட்சி பதாதைகளை கொடுத்து வீதியில் நிறுத்திய அமமுகவினர் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அமமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில் தினகரன் கலந்து கொண்டார். போதுமான அளவு கூட்டம் இல்லாததால், அரசு பள்ளியில் இருந்து திரும்பிய மாணவர்களை அழைத்துச் சென்ற அக்கட்சியினர், அவர்களின் கைகளில் பதாதைகளை கொடுத்து சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக நிற்க வைத்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அமமுகவின் செயல்பாட்டை கண்டு அதிருப்தி அடைந்தனர்.

Exit mobile version