சென்னையில் தவறவிட்ட மணி பர்ஸு சொந்த ஊரான ஆரணியில் கிடைத்தது – செந்தில்குமாரின் குடும்பம் நெகிழ்ச்சி

சென்னையில், மணி பர்ஸ் ஒன்றை கண்டெடுத்த சமூக ஆர்வலர், அதனை உரியவரின் முகவரிக்கே அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வேலை செய்யும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சீயம்பாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், கடந்த இரு வாரத்திற்கு முன்பு சென்னையில் மணி பர்ஸை தொலைத்து விட்டார்.

இந்தநிலையில் செந்தில் குமார் வீட்டிற்கு பதிவு தபால் மூலமாக கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்து பார்த்தபோது தொலைந்துபோன பர்ஸும் அதில், வைத்திருந்த
ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு மற்றும் 500 ரூபாய் பணமும் இருந்தது. அந்த பதிவு தபாலை அனுப்பிய சமூக ஆர்வலர் பாலாஜி என்பவர், உடன் ஒரு கடிதத்தை இணைத்து அனுப்பி இருந்தார். அதில், உங்கள் ஆதார் அட்டையுடன் தொலைபேசி எண்ணையும் இணைக்கவும் என்றும் கடிதம் கிடைத்தவுடன் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டுருந்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version