டிச.11 முதல் ஜன. 8 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்ப்பு

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது.

வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் ராஜஸ்தான்,மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குளிர்கால கூட்டத் தொடரை எப்போது நடத்துவது என்பது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 11 ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 8 தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் விமான விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனால் இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

 

Exit mobile version