நாடாளுமன்ற தேர்தல் : இன்று முதல் அதிமுகவினர் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், இன்று முதல் தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக தொண்டர்கள், இன்று முதல் தலைமைக் கழகத்தில் தங்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி வரை வழங்கப்படும் இந்த விருப்ப மனுக்களை, 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு, அதிமுக தலைமைக் கழகத்தில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், விருப்ப மனுக்கள் வழங்குவதை தொடங்கி வைக்கின்றனர்.

Exit mobile version