நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆய்வு கூட்டம்

மக்களவை தேர்தல் நல்ல முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்துவருவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்க்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 450 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version