நாடாளுமன்ற தேர்தல் : பிப் 4ஆம் தேதி முதல் அதிமுக சார்பில் விருப்ப மனு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 4ஆம் தேதி முதல் தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்களைவை தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக தொண்டர்கள், வரும் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் தலைமைக் கழகத்தில் தங்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 10ஆம் தேதி வரை வழங்கப்படும் இந்த விருப்ப மனுக்களை 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version