குடும்பச் சண்டையில் குழந்தையை வீதியில் விட்டுச் சென்ற பெற்றோர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் குடும்ப சண்டையில், கைக்குழந்தையை அனாதையாக வீதியில் விட்டுச் சென்ற பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் அருகே நேற்று ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை தனியாக நின்று கொண்டிருந்தது. அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மன்னார்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்குமார் என்பவர், தான் குழந்தையின் தாத்தா எனவும் , கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையின் பெற்றோர் வீதியில் விற்றுச் சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் உரிய விசாரணை நடத்திய அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை வீதியில் விட்டுச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version