காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு: பேய் பிடித்தது போல நாடகமாடிய பெண்

சேலம் அருகே, இளம் பெண் ஒருவர், பெற்றோர்கள் தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பேய் பிடித்தது போல நாடகமாடிய சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், வீட்டிற்கு தெரியாமல் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர், இந்தக் காதலை வீட்டிற்கு தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பேய் பிடித்தது போல நாடகமாடியுள்ளார். இதனால் அந்தப் பெண்ணை கோயிலில் அருள்வாக்கு கூறும் திருநங்கையிடம் அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு காதலனை மறக்கச் சொல்லி அந்த இளம் பெண்ணை பிரம்பால் அடித்த போது, வலி தாங்க முடியாமல், தான் நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Exit mobile version