திருவாரூர் அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் கல்வி சீர்வரிசை

திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிக்கு தேவையான 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கல்வி சீர் வரிசையாக மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கினர். குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட சேங்காலிபுரம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 80 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

தனியார் பள்ளிக்கு இணையாக இந்தப் பள்ளி திகழ்வதால், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையில் ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்து வருகிறது. இந்தநிலையில், சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தப் பள்ளிக்கு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எழுது பொருட்கள், மைக், ஸ்பீக்கர், நாற்காலிகள், குடிநீர் வைக்க மூடியுடன் கூடிய பாத்திரம் உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கல்வி சீர்வரிசையாக வழங்கினர்.

Exit mobile version